• July 13, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: ரயில் விபத்துகளின்போது சேலம் – அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதால், ரயில் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. எனவே, சேலம் – சென்னை இடையிலான 2-வது ரயில் பாதையாக இருக்கும் சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்று ரயில்வே ஆர்வலர்களும், பயணிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

தெற்கு ரயில்வேயில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெரிதும் பயனடையும் வழித்தடங்களாக இருப்பது, சென்னை- அரக்கோணம்- சேலம் வழித்தடம் மற்றும் சென்னை- விருத்தாசலம் வழித்தடம் ஆகியவையே. இதில், சென்னை- அரக்கோணம்- சேலம் ரயில்வே வழித்தடமானது, கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களை சென்னையுடன் இணைப்பதாக இருக்கிறது. இதேபோல், சென்னை- விருத்தாசலம் ரயில்வே வழித்தடமானது, தென் மாவட்டங்களை சென்னையில் இணைக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *