
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்காமல் மருத்துவர்களின் வாழ்வாதாரத்தில் தமிழக அரசு விளையாடி வருகிறது என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சுமார் 14 லட்சம் ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவர்களும், 7.5 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கைப்படி ஒரு நாட்டில் உள்ள மக்களில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பது அடிப்படை. இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர்.