• July 13, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த கனமழையால் தவளேஸ்வரம் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், கோதாவரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து புதுச்சேரி பிராந்தியமான ஏனாமினுள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் ஆந்திரத்துக்கு அருகேயுள்ள ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றையொட்டி அமைந்துள்ளது. கனமழையால் ஆந்திரம் மாநிலத்தின் அருகே உள்ள ஏனாம் பிராந்திய தவளேஸ்வரம் அணை நிரம்பியுள்ளது. தவளேஸ்வரத்தில் உள்ள சர் ஆர்தர் காட்டன் அணையில் கோதாவரி வெள்ளம் முதல் அபாய எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *