• July 13, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சராக பாஜகவின் ஜான்குமார் நாளை பதவியேற்கிறார். இதையொட்டி மட்டன் பிரியாணி ஆயிரம் பேருக்கு தருவதாக அறிவித்துள்ளார். இவரது பதவியேற்புக்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதுச்சேரி பாஜகவில் கோஷ்டிபூசல் நிலவியது. 6 எம்எல்ஏக்களில் இருவருக்கு அமைச்சர் பதவியும், சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் தரப்பட்டது. எஞ்சிய பாஜக எம்எல்ஏக்களும் பதவி கோரி வந்தனர். இதில் பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் உடன் இணைந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *