
சென்னை: உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரி ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கேற்ப சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.