• July 13, 2025
  • NewsEditor
  • 0

சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாறு பாலத்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் கிராம மக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பவானியாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், விவசாயப் பொருட்கள் விற்பனை என அனைத்து தேவைகளுக்கும் காந்தையாற்றை கடந்து லிங்காபுரத்தை அடைந்த பின்னரே நகரப் பகுதிக்கு செல்ல இயலும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *