
சென்னையின் முக்கிய போக்குவரத்து வாகனங்களில் ஒரே பயணச் சீட்டில் பயணம் செய்வதற்கான செயலியை, விரைவில் அறிமுகம் செய்வதற்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் ஒரே பயணச் சீட்டு மூலம் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிப்பதற்கான ஏற்பாட்டை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில் ஒரே பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செயலியும் வடிவமைக்கப்பட்டு, ‘அண்ணா செயலி’ என தற்காலிகமாக பெயரிடப் பட்டுள்ளது.