
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் டி.கே.சிவகுமார், சித்தராமையா இடையே பனிப்போர் நீடிக்கிறது.
இந்நிலையில் இருவரும் கடந்த 7-ம் தேதி டெல்லிக்கு சென்றனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை தனித்தனியாக சந்திக்க அனுமதி கோரினர். ஆனால் ராகுல் காந்தி சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு பெங்களூரு திரும்பினர்.