
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 9 பெண்கள் உட்பட 23 நக்சலைட்கள் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவாண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுக்மாவில் 3 தம்பதிகள் உட்பட 23 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர். இவர்களை பற்றிய தகவலுக்கு அரசால் மொத்தம் ரூ.1.18 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாவோயிஸ்ட்களின் வலிமை மிகுந்த அமைப்பான மக்கள் விடுதலை கொரில்லா படையின் (பிஎல்ஜிஏ) 1-வது படைப் பிரிவை சேர்ந்தவர்கள்.