• July 13, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப் 4 தேர்வு நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. சுமார் 11.18 லட்​சம் பேர் தேர்வை எழுதி உள்​ளனர். எத்​தனை தேர்வு மையங்​கள், எத்​தனை ஆயிரம் பணி​யாளர்​கள், எத்​தனை லட்​சம் தேர்​வர்​கள்.. அனை​வரை​யும் ஒருங்​கிணைத்து மிகுந்த கவனத்​துடன் தேர்​வாணை​யம் செயல்​பட்டு இருக்​கிறது. ஆணை​யத்​துக்கு மனமார்ந்த வாழ்த்​துகள்.

டிஎன்​பிஎஸ்சி தேர்வு குறித்து பல குற்​றச்​சாட்​டு​கள், விமர்​சனங்​களை பலர் எழுப்​பலாம். அதன் உண்​மைத் தன்​மைக்​குள் செல்ல விரும்​ப​வில்​லை. ஆனால், தேர்​வுக்​கான ஏற்​பாடு​களைப் பொருத்​தமட்​டில் பெரி​தாகக் குறையேதும் இல்லை என்​பதே உண்​மை. தேர்வு எழு​திய பல இளைஞர்​களைத் தொடர்பு கொண்டு விசா​ரித்​த​தில், எல்​லாத் தேர்வு மையங்​களி​லும் ஏற்​பாடு​கள் சிறப்​பாக இருந்​த​தாகவே கூறி​னார்​கள். இந்த வெற்​றிக்​குப் பின்​னால் இருக்​கும் திட்​ட​மிடல், உழைப்​பு,அர்ப்​பணிப்பு பாராட்​டுக்கு உரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *