
சென்னை: ‘திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் வளாகத்தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ மூலம் மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரயில்வே, நிதி, அஞ்சல் மற்றும் வருவாய்த் துறைகளில் பணியாற்ற 249 நபர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.