
சென்னை: போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை சிவானந்தா சாலையில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.