
மதுரை: மதுரையில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்றுவதற்கு திமுகவினர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை மாநகராட்சியில் வீடுகளுக்கு சொத்து வரி நிர்ணயிப்பதில் நடந்த பல கோடி முறைகேட்டைக் கண்டித்து பாஜக சார்பில் கோ.புதூர் பேருந்து நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.