
கடலூர்: “திமுக உறுப்பினர்களாக சேரவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
“கடலூர் மாவட்டத்தையே தானே புயல் புரட்டி போட்டது. அனைத்தும் அடியோடு சாய்ந்தது. பலா, முந்திரி மரங்கள் உள்ளிட்டவை உடைந்தன. அதற்கெல்லாம் நிவாரணம் கொடுத்தோம். விவசாயத் தொழிலாளர்களுக்கு விலையில்லா கறவை மாடு, விலையில்லா ஆடு, விலையில்லா கோழி வாங்கப்பட்டது. திமுக அரசு இதை நிறுத்தியது.