
சென்னை: நம்நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின் போது பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு பெற்றிருப்போம். அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியமானது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்தார். சென்னை ஐஐடியின் 62-வது பட்டமளிப்பு விழா நேற்று ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், சிறப்பு விருந்தினராக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 529 பிஎச்டி உட்பட மொத்தம் 3,227 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.