• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​தேனாம்​பேட்​டை​யில் உள்ள பாது​காப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் அலு​வல​கத்​தில் சென்னை பாது​காப்பு கணக்கு கட்டுப்​பாட்​டாளர் ஜெயசீலன் கூறிய​தாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்​சி​யில் பாது​காப்​புத் துறை ஓய்​வூ​தி​யர்​களுக்​கான சிறப்பு குறைதீர் முகாம் நடை​பெற்​றது. இந்த முகாமில் 7 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பாது​காப்​புத் துறை ஓய்​வூ​தி​யர்​கள் பங்​கேற்​றனர். அன்றைய தினமே 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குறை​களுக்கு தீர்வு காணப்​பட்​டது. மீத​முள்ள 2000 குறை​கள் ஒரு மாத காலத்​தில் தீர்க்கப்படும்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் அனைத்து பகு​தி​களுக்​கும் சென்று ஓய்​வூ​தி​யர்​களின் குறை​களைக் கேட்​டறிய 5 பிரச்​சார வாக​னங்​கள் அனுப்​பப்​பட்​டன. இந்த வாக​னங்​கள் மூலம் 5100 புகார்​கள் பெறப்​பட்டு அதில் 3 ஆயிரம் புகார்​களுக்கு அப்​போதே தீர்வு காணப்​பட்​டது. அதே இடத்​தில் தீர்​வு​காண முடி​யாத 2000 புகார்​களுக்கு 21 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *