
மதுரை: திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ள திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் வரும் 14-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடைசியாக அதிமுக ஆட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, 14 ஆண்டகளுக்கு பிறகு தற்போதுதான் கும்பாபிஷேகம் நடக்கிறது.