
சென்னை: சென்னை, புறநகரில் 2-வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சென்னை, புறநகரில் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் கடும் வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை சென்ட்ரலில் 7 செமீ, கொரட்டூர், விம்கோ நகரில் தலா 6 செமீ, சோழிங்கநல்லூர், ஐஸ் ஹவுஸ், புறநகர் பகுதியான படூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 செமீ, பாரிமுனை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகி இருந்தது.