
வேலூர்: “கடந்த தேர்தலில் அதிமுகவை நான்கு துண்டுகளாகவும், தற்போது பாமகவை இரண்டு துண்டுகளாவும் பாஜகவினர் ஆகிவிட்டார்கள். கட்சிகளை இரண்டாக உடைத்து மகிழ்வது தான் பாஜகவின் வேலை” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று மாலை பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “திமுக கூட்டணி மண் கோட்டை அல்ல, எஃகு கோட்டை. சுக்கு நூறாக உடையாது. உறுதியான கூட்டணி.