
புதுச்சேரி: ‘அதிமுக குடும்ப கட்சி இல்லை, மக்களின் கட்சி. சட்டம் – ஒழுங்கில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டது’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடலூர் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள், வியாபாரிகள், பொதுநல சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது: “தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வறட்சி, புயல், கரோனா ஏற்பட்டது. அப்போது இருக்கும் நிதியில் சிறப்பாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினோம்.