
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம் (IMM) கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் (ஜூன்) தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், அந்தக் கொடூரச் சம்பவம் நடந்தேறிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம் (IMM) கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது,