
புதுடெல்லி: நாட்டின் இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று விநியோகித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நமது நாடு 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நகர்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.