• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ சேர்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? அரசமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மதநல்லிணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்கிற ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தாம் வகிக்கும் பதவிக்கான வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ஒரு வரலாற்றுப் பிழை என்று கூறுகிறார். இந்த கருத்துக்கள் மக்களிடையே கடும் அதிருப்தியையும், சர்ச்சைகளையும் வெளிப்படுத்தி வருகின்றன. அரசமைப்புச் சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *