
மும்பை: மராத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்டைகள் மற்றும் ராணுவ தளங்கள், தமிழகத்தின் செஞ்சி கோட்டை ஆகியன ஐ.நாவின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
அமித்ஷா புகழாரம்: இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 12 கோட்டைகளை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. இது அனைத்து நாட்டு மக்களுக்கும் மிகுந்த பெருமையைத் தரும் தருணம்.