
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலை வர்கள், 2 நிலைக்குழு தலைவர்களை திமுக தலைமை அதிரடியாக ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் வணிகக் கட்டிடங் களுக்கு வரிவிதிப்பு செய்ததில் 2023-24-ம் ஆண்டுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்த அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார், இது தொடர்பாக 5 பில்கலெக்டர்களை அப்போதே சஸ்பெண்ட் செய்தார். இந்த விவகாரத்தில் கமிஷனர், துணை கமிஷனரின் பாஸ்வேர்டுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சைபர் க்ரைம் போலீஸார், இது தொடர்பாக 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணை யில், திமுக-வைச் சேர்ந்த மண்டலத் தலைவர் களுக்கும் இந்த முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்திருக்கிறது.