
ராஜ்கபூர், மாலா சின்ஹா நடித்து 1958-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம், ‘பர்வாரிஷ்’. இந்தப் படத்தின் பாதிப்பில் தமிழில் ‘பெற்றால் தான் பிள்ளையா?’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அதன் கதையில் சின்ன மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட திரைப்படம், ‘பார் மகளே பார்’. இயக்குநர் பீம்சிங், சிவாஜி கணேசன் காம்போ-வின் ‘ப’ வரிசை படங்களில் ஒன்று, இது.
சிவாஜி கணேசனுடன் சவுகார் ஜானகி, முத்துராமன், விஜயகுமாரி, ஏ.வி.எம் ராஜன், புஷ்பலதா, குமாரி ருக்மணி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா, சோ, மனோரமா என பலர் நடித்தனர்.