
புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்துக்கு டிசிஎம்ஏ கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த விமானம் அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மீது மோதியதால் 29 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.