• July 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்​துக்கு டிசிஎம்ஏ கோளாறு காரண​மாக இருக்​கலாம் என்று அமெரிக்க நிபுணர் தெரி​வித்​துள்​ளார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜ​ராத்​தின் அகம​தா​பாத் விமான நிலை​யத்​தில் இருந்து பிரிட்​டிஷ் தலைநகர் லண்​ட​னுக்கு புறப்பட்ட ஏர் இந்​தியா விமானம் 2 நிமிடங்​களில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் 241 பேர் உயி​ரிழந்​தனர். பிரிட்​டனை சேர்ந்த விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்​டும் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் பிழைத்​தார்.

இந்த விமானம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யின் மாணவர் விடுதி மீது மோதி​யதால் 29 பேர் உயி​ரிழந்​தனர். ஒட்​டுமொத்​த​மாக அகம​தா​பாத் விமான விபத்​தில் 270 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து தொடர்​பாக விமான விபத்து புல​னாய்வு அமைப்​பின் (ஏஏஐபி) சிறப்​புக் குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *