
திருமலை: மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே அவர் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தவறான சான்றிதழ்கள் கொடுத்து, தாங்கள் இந்துக்கள்தான் என சித்தரித்து, வேலை வாய்ப்பை பெற்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதர மதத்தினர் தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை உடனடியாக இனம் கண்டு அனைவரையும் வேலையை விட்டு நீக்க வேண்டும்.