
சென்னை: கோவை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிக்கினர்.