• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக ஜூலை 27, 28-ம் தேதி​களில் தமிழகம் வரு​கிறார். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் நடை​பெறும் ஆடி திரு​வா​திரை விழா மற்​றும் பெரம்​பலூர், தஞ்​சாவூரில் நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க உள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ளது. தேர்​தலுக்கு இன்​னும் 10 மாதங்​களே உள்ள நிலை​யில், அனைத்து கட்​சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்​தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜகவும் உறு​தி​யாக உள்ளது. இந்த நிலை​யில், கடந்த ஏப்​ரல் மாதம் சென்னை வந்​த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, அதி​முக​வுடன் கூட்​ட​ணியை உறுதி செய்​தார். அதன்​பிறகு, பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்​தார். அப்​போது, கூட்​டணி கட்​சிகளு​டன் பாஜக நிர்​வாகி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என நிர்​வாகி​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *