• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உலக மக்​கள்​தொகை தினத்​தையொட்​டி, சுகா​தா​ரத் துறை சார்​பில் பேரணி, விழிப்​புணர்வு போட்​டி, கருத்​தரங்​கம் நடை​பெற்​றன.

39-வது உலக மக்​கள்​தொகை தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, செம்​மொழி பூங்​கா​வில் விழிப்​புணர்வு பேரணியை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். தேனாம்​பேட்டை டிஎம்​எஸ் வளாகத்​தில் பேரணி நிறைவடைந்​தது. பின்​னர், அமைச்​சர் தலை​மை​யில்அதி​காரி​கள், ஊழியர்​கள் விழிப்​புணர்வு உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து கருத்​தரங்​கம் நடந்தது. இளம் பரு​வத்​தினருக்​கான விழிப்​புணர்வு நல கையேடு, குடும்​பநல விளக்க கையேடு​களை வெளி​யிட்ட அமைச்​சர், விழிப்​புணர்வு போட்​டி​யில் வெற்றி பெற்ற செவிலிய மாணவி​களுக்கு பாராட்டு சான்​றிதழ், கேட​யங்​களை வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *