
சென்னை: பெற்றோரால் கைவிடப்படும், ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படும் குழந்தைகள், மற்றவர்களால் கொண்டு வந்து ஒப்படைக்கப்படும் குழந்தைகள் குறித்து சட்டவிதிகளின்படி தகவல்கள் அளிக்கப்படுவதில்லை.