
அரியலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
அரியலூர் நகரில், ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.