
காரைக்குடி: பழனிசாமி முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவினர் ஒவ்வொரு அமைப்பையும் காவி மயமாக்க முயற்சித்து வருகின்றனர். இந்தி, இந்துத்துவாவை திணிக்க வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம். அது தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெறும்.