
விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் தன்னைத் தவிர வேறு முக்கிய தலைகள் யாரும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உஷாராக இருப்பதாக அதிமுக-வினர் அடிக்கடி சொல்வார்கள். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கேடிஆர்.எம்ஜிஆரின் முரட்டு பக்தர் என்று சொல்லப்பட்ட தாமரைக்கனி, 1991 ராஜிவ் அலையிலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் சுயேச்சையாக நின்று வென்றவர்.
அதேபோல் 1996-ல், அதிமுக-வுக்கு கிடைத்த நான்கு எம்எல்ஏ-க்களில் தாமரைக்கனியும் ஒருவர். அந்தளவுக்கு விருதுநகர் மாவட்ட அரசியலில் தனக்கென இரு இடத்தை தக்கவைத்திருந்தவர் தாமரைக்கனி. அப்படிப்பட்டவருக்கு 2001 தேர்தலில் ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகன் இன்பத்தமிழனை ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தி, சுயேச்சையாக போட்டியிட்ட தாமரைக்கனியை தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து இன்பத்தமிழனை அமைச்சராகவும், விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் ஆக்கினார் ஜெயலலிதா.