
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலமான ராயபுரம், துறைமுகம் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ராயபுரம் மட்டுமின்றி சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள விதிமீறல் கட்டிடங்களை அகற்றி, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.