
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே வெடித்த மோதலால், பாஜகவினர் சமாதானப்படுத்தும் பணியில் மும்முரமாகியுள்ளனர். இதுகுறித்து மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேச மாக இருப்பதால் ஆளுநருக்கே அதிகாரமுள்ளது.
திட்டங்களை நிறைவேற்ற ஆளுநரின் அனுமதி அவசியம். துறைக்கு அதிகாரி களை முதல்வர் பரிந்துரைக்க முடியுமே தவிர நேரடியாக நிய மிக்க முடியாது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய ஆளுநர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்தது.