
நாமக்கல்: “தமிழகத்தில் ஒருவேளை அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நம்மில் பாதி பேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம்" என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் திமுக சார்பு அணி நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியது: “கட்சியைப் பொறுத்தவரை சார்பணிக்கு தனி இடம் உண்டு. கட்சித் தலைவர் அறிவுறுத்தல்படி சார்பணியினரை சந்தித்து வருகிறேன். கட்சியை சார்ந்து சார்பணி இல்லை. சார்பணியை கட்சி சார்ந்திருக்கும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். 23 சார்பணி 25 சார்பணியாக உயர்த்தப்பட்டுள்ளது.