• July 10, 2025
  • NewsEditor
  • 0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன்கள் சுலைமான் இம்ரான் கான் மற்றும் காசிம் இம்ரான் கான் ஆகியோர் பாகிஸ்தானில் நுழையத் தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம், அவர்கள் சமூக ஊடகத்தில் பயன்படுத்திய “எதிர்ப்பு” மற்றும் “புரட்சி” என்ற இரண்டு வார்த்தைகள் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கானின் மகன்கள், தந்தையின் கைது நடவடிக்கை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தப் பதிவுகளில் பயன்படுத்தப்பட்ட “எதிர்ப்பு” மற்றும் “புரட்சி” போன்ற வார்த்தைகள், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டு வகையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், இந்த வார்த்தைகள் “நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை” என்று கூறி, சுலைமான் மற்றும் காசிம் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

மேலும், அவர்கள் பாகிஸ்தானுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் 2022-ல் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனால், அரசாங்கத்திற்கும் பிடிஐ-க்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இம்ரான் கானின் மகன்களின் சமூக ஊடக பதிவுகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் பாகிஸ்தானின் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுலைமான் மற்றும் காசிம் ஆகியோர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *