
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதி, அக்கட்சி கொடியின் வண்ணம் பூசப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு அரசு மானிய மண்ணெண்ணெய் வழங்க மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டப்புளி மீனவர் கிராமத்தை சேர்ந்த சூசை, ரூபன், அஜித் உட்பட 10 மீனவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது நாட்டுப் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதி, அக்கட்சி கொடியின் வண்ணத்தை பூசியிருக்கிறார்கள். அவ்வாறு கட்சி கொடி வண்ணத்தை பூசியிருந்ததால் இந்த மாதத்துக்கு அரசு மானியமாக வழங்க வேண்டிய 250 லிட்டர் மண்ணெண்ணெய் இந்த மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.