• July 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ((Special Intensive Revision – SIR) நடவடிக்கைகு ஆதார் அட்டையை ஓர் அடையாள ஆவணமாக ஏற்காதது ஏன்?’ என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், ‘ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தகு​தி​யான குடிமக்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்ப்​ப​தை​யும், தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்​கு​வதை​யும் முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணி​களை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது. அதன்​படி, பிஹாரில் 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள் தாங்​கள் இந்​தி​யாவை சேர்ந்​தவர்​கள் என்​பதை நிரூபிப்​ப​தற்கு பிறப்​புச் சான்​றிதழ், பாஸ்​போர்ட் போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *