
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில், “கூட்டணி தொடர்பாக தேர்தலின்போது முடிவு செய்வோம். பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை. வரும் 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியமைக்கும்” என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு மோதலானது. முதல்வர் ரங்கசாமி பரிந்துரையை ஏற்காமல் துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக சீனியாரிட்டி அடிப்படையில் இருந்த டாக்டர் செவ்வேலை சுகாதாரத்துறை இயக்குநராக நியமித்தார்.