
புதுடெல்லி: பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது பிரேசில், கானா, நமீபியா ஆகிய நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருதுகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இதுவரை 27 உலக நாடுகளின் மிக உயரிய சிவில் விருதுகளைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.