
சித்தூர்: மாம்பழ விவசாயிகளிடம் குறைகளை கேட்க நேற்று சித்தூர் மாவட்டம் வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க போலீஸ் நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகமானதால், மாங்காய் மண்டிகளில் மாங்காய்களை மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்க நேரிட்டது. கிலோவுக்கு ரூ.4 மானியம் கொடுப்பதாக ஆந்திர அரசு அறிவித்தும் அறுப்பு கூலி கூட கட்டுப்படியாகாததால், சித்தூர், திருப்பதி, மதனபல்லி, நெல்லூர், ஓங்கோல், கர்னூல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி அழித்து வருகின்றனர். இதனால் மா விவசாயிகளின் பிரச்சினைகளை தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது.