• July 10, 2025
  • NewsEditor
  • 0

சித்தூர்: ​மாம்பழ விவ​சா​யிகளிடம் குறை​களை கேட்க நேற்று சித்​தூர் மாவட்​டம் வந்த முன்​னாள் ஆந்​திர முதல்​வர் ஜெகன் மோகன் ரெட்​டியை சந்​திக்க போலீஸ் நிபந்​தனை​களை மீறி ஆயிரக்​கணக்​கான ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸ் கட்​சி​யின் தொண்டர்கள் குவிந்​த​தால், சென்​னை-பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது.

இந்த ஆண்டு மா விளைச்​சல் அதி​க​மான​தால், மாங்​காய் மண்​டிகளில் மாங்​காய்​களை மிக குறைந்த விலைக்கு விவ​சா​யிகள் விற்க நேரிட்​டது. கிலோ​வுக்கு ரூ.4 மானி​யம் கொடுப்​ப​தாக ஆந்​திர அரசு அறி​வித்​தும் அறுப்பு கூலி கூட கட்​டு​ப்படியாகாத​தால், சித்​தூர், திருப்​ப​தி, மதனபல்​லி, நெல்​லூர், ஓங்​கோல், கர்​னூல் ஆகிய பகு​தி​களில் விவ​சா​யிகள் மாங்​காய்​களை சாலைகளில் கொட்டி அழித்து வரு​கின்​றனர். இதனால் மா விவ​சா​யிகளின் பிரச்​சினை​களை தெலுங்கு தேசம் கட்​சி, மத்​திய அரசின் பார்​வைக்கு கொண்டு சென்​றுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *