
புதுடெல்லி: இறக்குமதி-ஏற்றுமதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த பொருளாதார குற்றவாளி மோனிகா கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான அனுமதியை நியூயார்க் நகர நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘‘மோனிகா ஓவர்சீஸ்’’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்களான ராஜன் கன்னா மற்றும் ராஜீவ் கன்னாவுடன் சேர்ந்து நகை வணிகத்திற்கான வங்கி போலி ஆவணங்களை தயார் செய்து வரி இல்லாமல் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசிடமிருந்து உரிமங்களைப் பெற்றார். இதன் மூலம் அவர் ரூ.2.36 கோடி மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்தனர்.