• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கம்​யூனிஸ்ட் கட்​சியை பற்றி பேச பழனி​சாமிக்கு தகுதி இல்லை என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, கோவை மாவட்​டம் வடவள்​ளி​யில் மேற்​கொண்ட பிரச்​சா​ரத்​தின்​போது, “தமிழகத்​தில் கம்​யூனிஸ்ட் கட்சி இருக்​கிற​தா, இல்​லையா என்ற முகவரியே இல்​லை’’ என்று விமர்​சித்​தார்.

இதற்கு கண்​டனம் தெரி​வித்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வெளி​யிட்ட அறிக்​கை​: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சொந்​த​மாக சிந்​தித்து அரசி​யல் முழக்​கங்​களை உரு​வாக்க முடி​யாமல், கடந்த 2021-ம் ஆண்​டுக்கு முன்பு அதி​முக ஆட்​சி​யில் இருந்​த​போது, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி முன்​வைத்த ‘தமிழகத்தை மீட்​போம்’ என்ற அரசி​யல் முழக்கத்தை, இன்​றைக்கு காலப் பொருத்​தம் இல்​லாமல் பேசி வரு​கிறார். மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணியை எப்​படி​யா​வது பிரித்​து​விட முடி​யாதா என பாடு​பட்டு வருபவர்​களின் அடிமை​போல செயல்​படும் அவர், தனது முயற்​சி​யில் தோல்​வியை தழுவி சித்தம் கலங்கி பேசுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *