
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாச‌ன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதேபோல கதக் மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கர்நாடக அரசு 10 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. மருத்துவ நிபுணர் குழு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.