• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை புகாரின் அடிப்​படை​யில் நடிகை அருணா வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். தமிழ் சினி​மா​வில் 1980-களில் முன்​னணி நடிகை​யாக வலம் வந்​தவர் அருணா. இயக்​குநர் பார​தி​ராஜா இயக்கிய கள்​ளுக்​குள் ஈரம் படத்​தின் மூலம் இவர் தமிழ் சினி​மா​வில் அறி​முக​மா​னார். தொடர்ந்து மகரந்​தம், சிவப்பு மல்​லி, நீதி பிழைத்​தது, நாடோடி ராஜா, டார்​லிங் டார்​லிங் டார்​லிங் உட்பட தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட பல்​வேறு மொழி திரைப்​படங்​களில் நடத்துள்​ளார்.

ஆந்​தி​ராவைச் சேர்ந்த இவர், தொழில​திப​ரான மோகன் குப்தா என்​பவரை திரு​மணம் செய்து கொண்​டு, குடும்​பத்​துடன் சென்னை நீலாங்​கரை கபாலீஸ்​வரர் நகரில் வசித்து வரு​கிறார். வீடு, பங்​களா​வில் உட்​கட்​டமைப்பு அலங்​கார பணி​களை மேற்​கொள்​ளும் நிறு​வனத்தை மோகன் குப்தா நடத்தி வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *