• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்குகளில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த கேட்களிலும் ‘இன்டர்லாக்கிங்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் வசதி இல்லாதது மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது அதிக போக்குவரத்து இல்லாத ‘சி’ பிரிவு கேட் ஆகும். ஒருவேளை, இங்கு இன்டர்லாக்கிங் வசதி இருந்திருந்தால், ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து ரயிலை நிறுத்தியிருக்கக்கூடும் என்று முன்னாள் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *