
சென்னை: வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த செட்-ஆப் பாக்ஸ்களுக்கு பதிலாக ரூ.500 மதிப்பிலான புதிய செட்-ஆப் பாக்ஸ்களை பொருத்த நிர்பந்திப்பதாக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடைபெற்று வரும் சீர்கேடுகளை முதல்வரின் கவனதுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின் மாநில தலைவர் சுப.வெள்ளைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தார்.